<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9.2" -->
<rss version="0.92">
<channel>
	<title>தமிழ்விசை.COM :: TamilVishai.Com</title>
	<link>http://www.tamilvishai.com/home</link>
	<description>தமிழரின் விகாசம்</description>
	<lastBuildDate>Wed, 08 Sep 2010 14:06:01 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் மரணம்</title>
		<description><![CDATA[


நடிகர் முரளிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இன்று காலையில், சிகிச்சை பலன் இன்றி அவருடைய உயிர் பிரிந்தது.
தமிழ்த் திரையுலகில் 1984இல் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அவர் தன்னுடைய 100 ஆவது படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவசந்தம், , இதயம், தங்க மனசுக்காரன், சின்னப் பசங்க நாங்க, பூமணி, [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30673</link>
			</item>
	<item>
		<title>ஜெயலலிதாவைக் கண்டு கருணாநிதி பயப்படுகிறார்: விஜயகாந்த்</title>
		<description><![CDATA[


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டு முதல்வர் கருணாநிதி பயப்படுகிறார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


ரம்ஜான் நோன்பினையொட்டி வடசென்னை தே.மு.தி.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசியது:
நான் மதுரையில் வசித்த காலத்தில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். பள்ளிவாசல்களுக்குத் தொடர்ந்து அரிசி வழங்கி வருகிறேன். இல்லாதவர்களுக்கு இயன்றதைச் செய்து வருகிறேன். நபிகளின் ஐந்து கட்டளைகளில் ஏழைகளுக்கு உதவுதல் என்ற இறுதி கட்டளைதான் அனைத்திலும் முக்கியமானதாகப் [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30670</link>
			</item>
	<item>
		<title>திருவாரூர் அருகே கோஷ்டி மோதலில் ஒருவர் பலி</title>
		<description><![CDATA[


திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், 7 குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.


4 பேர் அரிவாளால் வெட்டுப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த விஜி(22) என்ற வாலிபர் தீயில் உடல் கருகி இறந்தார்.






]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30667</link>
			</item>
	<item>
		<title>ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியது</title>
		<description><![CDATA[


மாநிலத்தில் பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைய ஆதரவு தரத் தயார் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கவே, ஆட்சி அமைக்க ஆளுநர் எம். ஓ.எச். பரூக்கை சந்தித்து பாஜக செவ்வாய்க்கிழமை உரிமை கோரியது.


பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் 45 எம்எல்ஏக்களின் பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் பேரவையில் பாஜகவுக்கு 18 உறுப்பினர்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2, அகில ஜார்க்கண்ட் மாணவர் [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30664</link>
			</item>
	<item>
		<title>இன்று காலை பேருந்து விபத்தில் 9 பேர் பலி</title>
		<description><![CDATA[


திருவண்ணாமலை அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர்.


இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக கடலூர் செல்லும் அரசு பஸ் மீது, திருவண்ணாமலையில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லாரியின் டிரைவர், [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30661</link>
			</item>
	<item>
		<title>தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசரச் சட்டம்</title>
		<description><![CDATA[


தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30658</link>
			</item>
	<item>
		<title>பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?</title>
		<description><![CDATA[


பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். 15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம். கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30655</link>
			</item>
	<item>
		<title>பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு</title>
		<description><![CDATA[18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 82 இஸ்லாமிய நாணயங்களை ஜேர்மனிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி நாணயங்கள் சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்தவையெனக் கருதப்படுகின்றது.
ஆய்வாளர் குழுவொன்று ஜேர்மனியின் மெக்லன் பேர்க் மாகாணத்தில் உள்ள அன்க்லாம் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போதே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நாணயங்கள் தூய வெள்ளியினால் செய்யப்பட்டவை. மேலும் இவை 180 ஆவது ஹிஜ்ரி வருடத்தினை சேர்ந்தவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் இந்நாணயங்கள் சுமார் 1200 வருடங்களுக்கு [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30652</link>
			</item>
	<item>
		<title>கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி</title>
		<description><![CDATA[


மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று காசை ஆற்றில் ஒரு படகு புறப்பட்டுச் சென்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேலும் அதில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) டிரம்களும் எடுத்துச் செல்லப்பட்டன
இந்த படகு திடீரென்று கவிழ்ந்தது. அப்போது அதில் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் படகு என்ஜினில் கொட்டி தீப்பிடித்தது. இதைத் [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30649</link>
			</item>
	<item>
		<title>இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு</title>
		<description><![CDATA[


இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் நகர் மீது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் (1940) நடந்து கொண்டிருந்த போது லண்டனில் பிளிட்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு தெரு ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதன் 70-ம் ஆண்டு விழா பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் சார்பில் கொண்டாப்பட்டது.
அப்போது அரிய வகை வீடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில் பிரிட்டனின் விமானப்படைப்பிரிவில் பணியாற்றிய வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து திரைப்படம் எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சோதனை [...]]]></description>
		<link>http://www.tamilvishai.com/home/?p=30646</link>
			</item>
</channel>
</rss>
